சுக்கிரன் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததா?

குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி போல் சுக்கிரன் பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் :

ஆமாம், சுக்கிரன் சராசரியாக 28 நாட்கள், 30 நாட்கள் ஒரு வீட்டில் இருக்கக் கூடியவர். சுக்கிரன்தான் மழைக் கோள் என்றும் அழைக்கப்படுவது. அவர் இருக்கக் கூடிய வீடுகள், அவர் பார்வை படும் வீடுகள் ஆகியவற்றைக் கொண்டுதான் மழை பொழிதல் ஜோதிட ரீதியாக கணக்கிடப்படுகிறது. அதுபோல், வீடு கட்டுவது, குடி போவது ஆகிய நிகழ்வுகளுக்கும் சுக்கிரன் முக்கியமானது.

இப்படிப்பட்ட நிகழ்வுகளின் போது சுக்கிரன் மறைந்திருக்கக் கூடாது. சுக்கிரனை வெள்ளி என்று சொல்கிறோம். வீடு கட்டி குடி போகிறோம் என்றால் வெள்ளி எதிரில் இருக்கக் கூடாது. கொள்ளி எதிரில் சென்றாலும், வெள்ளி எதிரில் செல்லாதே என்றொரு பழமொழி உண்டு. அதாவது எந்த திசையை நோக்கி நாம் வீடு குடிபோகிறோமோ அந்த திசைக்கு நேர் எதிராக வெள்ளி இருக்கக் கூடாது. அப்படி இருந்ததென்றால் அது ஆபத்தை உண்டாக்கும்.

அதேபோல் வெள்ளிக்கு ஆன்மீக சக்தியும் அதிகம் உள்ளது. ஹோமம் செய்யும்போதெல்லாம் வெள்ளியில் செய்த பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு. இப்படி சுக்கிரனின் அம்சங்கள் நிறைய உண்டு. சுக்கிரனும், குருவும் ஒரே வீட்டில் இருந்தால் மூடம் என்று சொல்வார்கள். அந்த நாட்களில் திருமணம் செய்யக் கூடாது, வீடு குடிபோகக் கூடாது, வீடு கட்டத் தொடங்கக் கூடாது. அதனால் சுக்கிரனை அடிப்படையாக வைத்து பல விடயங்கள் உள்ளன.

 

Visit : tmpooja.com/info

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *