விளக்கம்:
ஸ்ரீ ராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர;. வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர;.
உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.
‘ராம” என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி ‘மரா” என்றே முதலில் உச்சரித்தார;. ‘மரா” என்றாலும், ‘ராம” என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள்.
ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தானும் தாக்கிக் கொண்டாள். ‘ரமா” என்று அவளுக்கு பெயருண்டு. ‘ரமா” என்றால் ‘லட்சுமி”. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும்.
ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘ரா” என்றால் ‘இல்லை” ‘மன்’ என்றால் ‘தலைவன்’. இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள்.
முதன் முதலில் ராமநாமம் எழுதியவர் யார் ;?
ராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர; அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர;ச்சிப் பெருக்கில் வார;த்தைகள் ஏதும் வரவில்லை.
வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர; பணிந்து அம்மா! என்று மட்டும் சொல்ல முயன்றார;. ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார;.
சீதையின் முன் மணலில் ‘ஸ்ரீPராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார;. அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள்.
முதன் முதலில் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதியவர; அனுமன் தான்! அன்று முதல் லிகித நாமஜெபம் என்ற பெயரில் ராம நாமத்தை பனை ஓலைகளில் மற்றும் காகிதத்தில்