18 சித்தர்களின் வரலாறு

அகத்தியர்:

             குரு:சிவபெருமான்

             காலம்:4 யுகம் 48 நாட்கள்

             சீடர்கள்:போகர், மச்சமுனி

             சமாதி:திருவனந்தபுரம்

18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.

போகர்:

              குரு:அகத்தியர்

             காலம்:300 ஆண்டுகள், 18 நாட்கள்

             சீடர்கள்:கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்

             சமாதி:பழனி

இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார். நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

திருமூலர்:

               குரு:நந்தி

              காலம்:3000 ஆண்டுகள், 13 நாட்கள்

              சமாதி:சிதம்பரம்

63 நாயன்மார்களில் ஒருவர். மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதமாக 3000 பாடல்களை கொண்டு திருமந்திரம் என்ற நூலை வழங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி அடைந்தார்.

வான்மீகர்:

              குரு:நாரதர்

             காலம்:700 ஆண்டுகள், 32 நாட்கள்

              சமாதி:எட்டிக்குடி, திருவையாறு

இவர் நாரத முனிவரின் சீடர். இராமாயண இதிகாசத்தை அளித்தவர். எட்டிக்குடு எனும் ஊரில் சமாதி அடைந்தார்.

தன்வந்த்ரி:

             காலம்:800 ஆண்டுகள், 32 நாட்கள்

             சமாதி:வைத்தீஸ்வரன் கோவில்

இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார். இவர் ஆயுர்வேத மருத்துவ முறையை மக்களுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தார்

இடைக்காடர்:

              குரு:போகர், கருவூரார்

             காலம்:600 ஆண்டுகள், 18 நாட்கள்

             சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

            சமாதி:திருவண்ணாமலை

இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது பாடல்கள் உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையனதாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார்.

கமலமுனி:

            குரு:போகர், கருவூரார்

            காலம்:4000 ஆண்டுகள், 48 நாட்கள்

            சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

           சமாதி:ஆரூர்

இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.

கருவூரார்:

            குரு:போகர்

            காலம்:300 ஆண்டுகள், 42 நாட்கள்

            சீடர்கள்:இடைக்காடர்

            சமாதி:கரூர்

இவர் போகரின் சீடர். தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்தார். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர்.

கொங்கணர்:

                குரு:போகர்

                காலம்:800 ஆண்டுகள், 16 நாட்கள்

                சீடர்கள்:557 சீடர்கள்

                 சமாதி:திருப்பதி

இவர் போகரின் சீடர். அத்தோடு, இவர் பல மகான்களை சந்தித்து ஞானம் அடைந்தார். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்ட என பல நூல்களை இயற்றியுள்ளார்.

கோரக்கர்:

             குரு:தத்தாத்ரேயர், மச்ச முனி, அல்லமா பிரபு

             காலம்:880 ஆண்டுகள், 32 நாட்கள்

             சீடர்கள்:நாகர்ஜூனா

            சமாதி:போயூர்

மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.

குதம்பை சித்தர்:

             குரு:அழுகுணி சித்தர்

             சமாதி:மாயவரம்

இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார்.இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு மிக்கவை

மச்சமுனி:

               குரு:அகத்தியர்,பிண்ணாக்கீசர், பசுண்டர்

               காலம்:300 ஆண்டுகள், 62 நாட்கள்

               சீடர்கள்:கோரக்கர்

              சமாதி:திருபரங்குன்றம்

பிண்ணாக்கீசரிடம் மாணாக்கராக இருந்து உபதேசம் பெற்றார். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை இயற்றியுள்ளார்.

பாம்பாட்டி சித்தர்:

              குரு:சட்டைமுனி

              காலம்:123 ஆண்டுகள், 32 நாட்கள்

              சீடர்கள்:

              சமாதி:மருதமலை

“ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

பதஞ்சலி:

             குரு:நந்தி

            காலம்:5 யுகம், 7 நாட்கள்

             சமாதி:ராமேஸ்வரம்

இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார்.

இராமத்தேவர்:

               குரு:புலஸ்தியர், கருவூரார்

              சீடர்கள்:சட்டைமுனி, கொங்கணவர்

              சமாதி:அழகர் மலை

இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கலானார். அங்கு இவர், யாக்கோபு என அழைக்கப்பட்டார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார்.

சட்டைமுனி:

                குரு:போகர்

                காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

                சீடர்கள்:சுந்தரானந்தர், பாம்பாட்டி

                சமாதி:ஸ்ரீரங்கம்

சட்டைமுனி சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்.

சிவவாக்கியர்:

                    குரு:–போகர், கருவூரார்

                    காலம்:–4000 ஆண்டுகள், 48 நாட்கள்

                    சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

                    சமாதி:கும்பகோணம்

சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது.

சுந்தரானந்தர்:

                 குரு:சட்டைமுனி, கொங்கணவர்

                 காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

                 சமாதி:மதுரை

இவர் சட்டைமுனியின் சீடர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார்.

 

Sphatika Mala

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *