ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிடக்கூடாதாம்…

எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?

*தேன் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து சாப்பிட்டக் கூடாது, ஏனெனில் அது விஷமாகிவிடும்.

*வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளகூடாது. மேலும் வாழைப்பழம் சாப்பிட்ட பிறகும் இவற்றை சாப்பிடக்கூடாது.

*பழங்களை தனியாக தான் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் போது, பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.

*காய்கறி சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

*மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்து சாப்பிடக் கூடாது.

*உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது.

*உடல் குண்டாக இருப்பவர்கள், கோதுமையால் தயாரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

*ஆஸ்துமா, சளி பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

*மூல நோய் உள்ளவர்கள் முட்டை, காரம், மாமிச உணவுகள் ஆஇயவற்றை சாப்பிடக் கூடாது.

*வெண்கல பாத்திரத்தை நெய் வைத்து சாப்பிட பயன்படுத்தக் கூடாது.

*வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது. அதற்கு முன் ஒரு டம்ளர் நீராவது குடிக்க வேண்டும்.

*மஞ்சள் காமாலை மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.

*மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

*சரும நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், வேர்கடலை, கருவாடு, மீன், காரம், புளிப்பி அதிகம் சாப்பிடக் கூடாது.

*கோதுமையை நல்லெண்ணெய் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.

*மூட்டு மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் மாமிசம், மீன், முட்டை மற்றும் கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது.

Pooja Plate

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *