நமது மூளைச் செயல்பாடுகளை… பாதிக்கக்கூடிய 10 பழக்கங்கள்!

1.  காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல்  இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது  மூளைக்கு தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல்  ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்: மூளை சுருங்கவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.  நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது  உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5.  மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான  ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன்  செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6. தூக்கமின்மை: நல்ல தூக்கம்  நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலத்திற்கு தேவையான அளவு  தூங்காமலிருப்பது, மூளைக்கு நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7.  தலையை மூடிக் கொண்டு தூங்குவது: இது போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க  வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான  ஆக்ஸிஜன் மூளையை பாதிக்கிறது.
8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை  கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில், மிக அதிகமாக மூளைக்கு வேலை  கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும், மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன  பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9. சிந்தனைகளை  மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை  மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை  வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது, மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

ACD Cosmic France Bhajans For The Youth

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *