அகத்திக்கீரை-ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை-சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை-சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை-தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை-வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை– கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை– பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை-ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை-சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை– வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை-பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை-உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை-ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை– ரத்தசோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை– நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை– மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை-கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை– சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை-விஷம் முறிக்கும்.
தும்பைகீரை– அசதி, சோம்பல் நீக்கும்.
கல்யாண முரங்கைகீரை-சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கிகீரை– நீரடைப்பு நீக்கும்.
பருப்புகீரை– பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்சகீரை– கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை-வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை-வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை– பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை– தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை– மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை-ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை– இருமலை போக்கும்.
சாணக்கீரை– காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை-தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை-பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை-பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை– வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை– வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை– மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை– சளியை அகற்றும்.
நருதாளிகீரை-ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.