ARULMIGU SUBRAMANYASWAMY TEMPLE KANGEYAM

Main God :

Arulmigu Subramanya Swamy

Location : 

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,

சிவன்மலை, காங்கயம் – 638 701 .

திருப்பூர் மாவட்டம். தமிழ்நாடு.

Festivals : 

  சித்திரைக் கனி என்னும் தமிழ்வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயக சதுர்த்தி , நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்உறாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாதப்பூசை, திருவாதிரை, தைமாதம் திருத்தேர், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் கோயிலில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. மற்றும் அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, பௌர்ணமி நாள், வெள்ளிக் கிழமை போன்ற நாட்களில் அன்பர்கள் வந்து சுப்பிரமணியரைத் தரிசிப்பர். மற்ற நாட்களிலும் பொது மக்கள் வருவர். அண்மைக் காலத்தில் சிவன்மலையில் திருமண நிகழ்ச்சிகள் மிகுதியாக நடைபெறுகின்றன. ஆடி சஷ்டியில் அன்னதானம் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதம் பௌர்ணமியில் வரும் கார்த்திகை அன்று வழிபடுவது மிகவும் விசேடம் என்று தலபுராணம் கூறுகிறது.

தைப்பூசத் தேர்திருவிழா :

தைப்பூசத் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறுகின்றன. விழாவின் தொடக்கமாக முதல் நாள் இரவு 9 மணிக்கு கிராம தேவதை அருள்மிகு வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். இரண்டாம் நாள் இரவு 7 மணிக்கு அருள்மிகு வீரகாளியம்மன் திருவுலாக்காட்சி நடைபெறும். மூன்றாம் நாள் இரவு 9 மணிக்கு அருள்மிகு வீரகாளியம்மன் திருத்தேர்த் திருவிழாவும், கிராம சாந்தியும் நடைபெறும்.

கோவில் சிறப்பு உத்தரவு பெட்டி :

சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே  ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ  கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.

Workship Timing : 

1.) விழா பூசை காலை 6 மணி

2.)காலசந்தி காலை 9 மணி

3)உச்சிகாலம் மதியம் 12 மணி

4)சாயரட்சை மாலை 6 மணி

5)அர்த்தசாமம் இரவு 8 மணி

History : 

தோற்றம் :

        எல்லா மலைகளையும் இமயத்துடன் தொடா;புபடுத்திக் கூறுவது நம் நாட்டு வழக்கம். சிவன்மலைக்கும் அவ்வகையான பழந்தொடா;பு ஒன்று கூறப்படுகிறது.திhpபுர சம்உறாரத்தின்போது சிவபெருமான் வாசுகியைக் கணையாக வைத்து சேருமலையை வில்லாக வளைத்தார். அப்போது மேரு மலையின் சிகரங்களில் ஒன்று காங்கய நாட்டில் விழுந்தது.

இலக்கியங்களில் சிவமலை :

        சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை, சிவசைலம், சிவநாகம், சிவகிரி என்று பல பெயாகளாலும் குறிக்கப்பட்டுள்ளது.

புலவர்கள் :

        “தெரிதமிழ்தேர் சிவமலை” “செல்வச்சிவமலை” “வடித்த செந்தமிழ்ச் சிவாத்திரி” “வலிமைசோர் சிவாசலம்” “புவனம் பரவும் சிவமலை”.

“கல்யாணசிவமலை” “இருநிதி சூழ் சிவமலை” “மகிமைசேர் சிவமலை” “தவசுபுரி சிவமலை”.என்றெல்லாம் புகழ்ந்து சிவன்மலையைப் பாடிப் பரவியுள்ளனா. பார்வதிதேவியார் எழுந்தருளிய காரணத்தால் “சத்திகிரி” எனப்பெயார் பெற்றது. “சத்திசிவகிரி” என்பதும் வழக்கம்.

திருநாமங்கள் :

        சிவமலை முருகனைச் சுப்பிரமணியர், சிவசுப்பிரமணியர், கல்யாண சிவசுப்பிரமணியார், காங்கயன், கந்தசுவாமி, வேலன், வேலுசாமி, முத்தய்யன், முருகையன், சிவாசலபதி, குகன், சிவாசலவேந்தன், சிவாத்திரிநாதன், வள்ளிமணாளன், கந்தவேள், குமரன், துரைசாமி, மரகதமயூரன் என்று பல்வேறு பெயார்களில் அழைத்துள்ளனார்.

இப்பெயார்களில் எப்பெயரிட்டு அழைத்தாலும் சுப்பிரமணியார் அதனை மிக உவப்பாக ஏற்றுக்கொள்வார். மலையை வணங்கினாலே சிவன்மலையாண்டவரை வணங்கியபேறு பெறலாம.

சிவன்மலைச் சிறப்புகள் மலையைச் சுற்றிலும் அட்ட துர்க்கை இருப்பதாகக் கூறுவர். ஆலாம்பாடி வனசாட்சி (காட்டம்மை) பாப்பிணி அங்காளபரமேஸ்சுவர், காங்கயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அத்தனூரம்மன், கர்யகாளியம்மன், செல்வநாயகி என்று எட்டு அம்மன் பெயர்களைக் சூழ்ந்துள்ள எட்டு இடங்களுக்குக் கூறுகின்றனர்.

இதனைக் குறவஞ்சி, அட்டதுர்க்கை எட்டுப் பத்திரகாளியும் ஓர் எட்டுத் திக்கும் காவல்மலையே அட்டநாகம் அட்ட குலங்கள் குலபருவதமோர் எட்டும் சுற்றும் தாங்கும்மலையே| என்று கூறுகிறது.

496 படிகள் சிவன்மலையில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் மலை அமைந்துள்ளது. படிக்கட்டில் உள்ள பாலவிநாயகார் கோயிலைப் பழையகோட்டை சின்ன அரண்மனை பார்வதி அர்ஜீனன் அவார்களும், அவார்கள் தாயார் வெளர்ளக்கிணறு மீனாட்சியம்மாள் அவார்களும் 1966 ஆம் ஆண்டு கட்டி வைத்துள்ளார். பதினெட்டாம் படியைச் சத்தியப்படி என அழைப்பார். அங்கு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. இப்பதினெட்டாம்படி புராணப்படி என்றும் அழைக்கப்பெறும். இங்குதான் சடைச்சியம்மன் வழிபட்டதும், குடியிருப்பதுமாகும் என்று குறவஞ்சியில் கூறப்படுகிறது. இங்கு அர்த்தமேரு அமைக்கப்பட்டுள்ளது அதன்மேல் திருவடிகள் உள்ளன.

பிற இடங்களில் விநாயகருக்கு முதல் பூசை நடத்தே மற்ற தெய்வங்களுக்குப் பூசை நடக்கும். ஆனால் சிவன்மலையில் முதலில் முருகனுக்கே பூசை நடைபெறுகிறது. விநாயகப் பெருமானே முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்று சிவாச்சாரியார்கள் கூறுகின்றார்.

வடக்கே தலையும் தெற்கே தோகையும் இருந்தால் தேவமயில் என்றும், வடக்கே தோகையும் தெற்கே தலையும் இருந்தால் அசுர மயில் என்றும் கூறுவர். சிவன்மலையில் தேவ மயிலே உள்ளது.

சூரியனைப் பார்த்து எல்லா நவக்கிரங்கள் இருப்பதும் இந்தத் தலத்தின் விசேடமாகும்.

மலைப்படிகளின் வழியாக அன்பர்கள் நடந்து சென்றால் அவர்கள் தங்கி ஓய்வெடுக்கப் பல அழகிய மண்படங்கள் பழையதும் புதியதுமாக உள்ளன. பாத விநாயகர் மண்டபம் பழையகோட்டை மண்டபம் அருளாடிகள் மண்டபம் பழைய கோட்டை சின்ன அரண்மனை மண்டபம் (பால விநாயகர் கோயிலுடன்) சிலம்பகவுண்டன்வலசு வெங்கட்ரமணசாமிக் கவுண்டர் மண்டபம் பொன்னப்ப செட்டியார் வகையறா மண்டபம் சோமசுந்தரக் குருக்கள் மண்டபம் நாலுகால் மண்டபம் வெள்ளக்கிணறு வெள்ளியங்கிரிக் கவுண்டர் வகையரா மண்டபம் காங்கயம் கதிர்வேல் முதலியார் மண்டபம் தாராபுரம் நரசிம்மன் மண்படம் ராமலட்சுமியம்மன் மண்டபம் .போன்ற பல மண்டபங்கள் உள்ளன. இவ்வயைன மண்டபங்களை கொங்குநாட்டுக் கல்வெட்டுக்கள் ~கற்பந்தல்| என்று சிறப்பிக்கிறது.

சிவன்மலைமேல் கோயிலுக்கு வெளியே தீபத்தம்பம் உள்ளது. தீபத்தம்பத்தில் கிழக்கில் விநாயகரும், தெற்கில் சூலமும், மேற்கே தண்டபாணியும், வடக்கே மயிலும் உள்ளனர். தீபத்தம்பம் மண்டபத்துடன் உள்ளது.

உள்ளே நுழைந்தால் தெற்குப் பிரகாரத்தில் கைலாசநாதர் ஞானாம்பிகை திருக்கோயில் கிழக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். நவகன்னியருக்கும், நவவீரர்களுக்கும், இங்கு தவமிருந்த உமாதேவியாருக்கும் கைலாசத்திலிருந்து எழுந்தருளி அருள் கொடுத்தவர் கைலாசநாதர்.

எனவே இத்தலத்தில் கைலாசநாதர் தொடர்பு மிகப் புராதனமானது. தலபுராணத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானைக்கும் முன்னர் கைலாசநாதருக்கும் ஞானாம்பிகைக்கும் வணக்கும் கூறப்படுகிறது. எதிரில் புளியமரம் உள்ளது. கன்னிமூலை விநாயகர் தென்மேற்கிலும், தண்டபாணி வடமேற்கிலும் மேற்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ளனர். சனிபகவான், நவககிரகக் சன்னதிகளைக் கடந்து கொடிமரம், மயில்வாகக் குறடு, பலிபீடம் கடந்து சென்று சுமுகர் சதேகர் எனும் துவார பாலகர்களைக் கடந்த சுப்பிரமணியரை வணங்கிப் பேறு பெறலாம். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாய்க் கருவறையில் வள்ளியோடு சுப்பிரமணியர் எழுந்தருளியுள்ளார். பின்னர் சுப்பிரமணியார், வள்ளி தெயவானைத் திருக்கோலத்தை கண்டு வணங்கி வேண்டியவற்றை வேண்டியாங்கு பெற்று வாழ்வாங்கு வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *