SRI RANGANATHASWAMY TEMPLE SRIRANGAM

Main God :

Sri Ranganathaswamy

pooja

Location : 

ஸ்ரீ ரங்கநாதர் ஸ்வாமி கோவில்

ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620 006.

தமிழ்நாடு, இந்தியா

Festivals : 

ஜேஸ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்)

சேர்ந்திருக்கும் அசுத்தங்களை நீக்கிவிடுவிப்பதற்காக ஆனி தமிழ்மாதத்தில் (ஜீன் – ஜீலை கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் மூலஸ்தான கருவறை சுத்தம் செய்யப்படும், கோயிலில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூலிகை எண்ணெய் அபிஷேகம் பெரிய பெருமாளுக்குச் செய்யப்படும். உற்சவர் நம்பெருமாள் மற்றும் தேவியர்களின் தங்கக் கவசம் (தங்கதட்டுகள் பொற்கொல்லரால் சுத்தம் செய்யப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனித காவிரித் தீர்த்தம் எடுத்துக் காண்டு வருவதற்கு நிறைய பூசாரிகளும், பக்தர்களும் காவிரி ஆற்றுக்குச் செல்வார்கள். தங்கக்குடம் யானை மீது வைத்து கொண்டுவரப்படும். தங்கக்குடம், விஜயரங்க சொக்க நாயக்கரால் 1734ல் நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கிடையே இது, சில கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது, அதற்குப் பிறகு கடவுள்களின் கிருபையில் இது மீட்கப்பட்டது. இந்தத் தங்கக்குடத்தில் தெலுங்கு மொழியில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறைய வெள்ளிக் குடங்களில் புனித காவிரித்தீர்த்தம நிரப்பப்பட்டு கோயிலுக்கு கொண்டு வரப்படும். காவிரியிலிருந்து கோயிலுக்கு வரும் வழியில் வேதங்கள் ஓதப்படும். அதன்பிறகு, மேற்குப் பக்கத்தில் குடங்கள் வைக்கப்பட்டு, அனைத்து விக்கிரகங்களும் ‘திருவெண்ணெயாழி பிரகாரத்தில்’ உரிய ஸ்தானத்தில் அமர்த்தப் (வைக்கப்) படும். தங்கக் கவசங்கள் விக்கிரகஙிகளிலிருந்து களையப்பட்டு ஜீயர் சுவாமிஜி மற்றும் வதுலா தேசிகர் சுவாமியிடம் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு கவசங்கள் பொற்கொல்லரால் சுத்தம் செய்யப்படும். பொது வழிபாட்டிற்குப் பிறகு மாலையில் கவசங்கள் அணிவிக்கப்படும்.

1

பவித்ரோத்ஸவம்

தமிழ் மாதம் ஆனியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) ரங்கநாத சுவாமி பெருமாள் அணியும் புனித நூல் (போர்வை) போற்றியும் மற்றும் தினசரி பூஜை சடங்குகளில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் இது, தமிழ் மாதம் ஆனியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) கொண்டாடப்படுகிறது. முதல் நாளன்று யாகசாலையில் உற்சவருக்கு 365 முறை திருவராதனம் நடத்தப்படுகிறது மற்றும் இரண்டாவது நாளன்று மூலஸ்தான கர்ப்பக்கிருஹத்தில் (கருவறையில்) அனைத்து தெய்வங்களுக்கும் 1008 முறை திருவராதனம் நடத்தப்பட்டு, பூகண்டி சேவை (அங்கோபங்க சேவை) எனப்படும் புனித நூல் போர்வை கொண்டு மறைக்கச் செய்யப்படுகிறது. இந்த விழா, பெருமாளுக்கு செய்யப்படும் தினசரி பூஜையில் நிகழும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த விழா சேரனை வென்றான் மண்டபம் என்கிற பவித்ர மண்டபத்தில் நடத்தப்படுகிறது. இந்த மண்டபம் ஜடவர்ம சுந்தரபாண்டியனால் நிறுவப்பட்டது. முஸ்லிம் படையெடுப்பிற்குப் பிறகு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1371-ல் பெருமாளும் மற்றும் தேவியர்களும் நுழைந்தனர். மேற்குறிப்பிட்ட மண்டபத்தில் தேவியர் கருவறை (கர்ப்பக்கிருஹம்) நிறுவப்பட்டது. இந்த விழா முதலில் பிரம்மாவால் தொடங்கப்பட்டது. இந்த விழாவின் காரணமாக அனைத்து விக்கிரங்களுக்கும் புனித பருத்திநூல் போர்வை (பவித்ரம்) அணிவிக்கப்படுகிறது.

ஶ்ரீ ஜெயந்தி

ஶ்ரீ ரங்கநாதசாமி கோயில் வளாகத்திற்குள் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் கிருஷ்ண பெருமானின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கிளி மண்டப கிருஷ்ணர் கோயிலில், தனது தந்தை நந்தகோபன் மற்றும் தனது தாயார் யசோதா மற்றும் ரோஹினி ஆகிய பொற்றோருடன் கிருஷ்ணர் சிலை கோயில் முன்னிலையில் நிறுவப்படும். புனித தீர்த்தம் சுபிஷேகம் செய்யப்படும். நான்கு சித்திரை தெருக்களில் கிருஷ்ணர் மற்றும் நம்பெருமாள் பவனி வரும். இந்த விழாவின் காரணமாக ஶ்ரீ பண்டாரத்திற்கு நம்பெருமாள் விஜயம் செய்வார். இவர்களுடைய திருமஞ்சனம் நம்பெருமாளுக்கு செய்யப்படும்.

2

ஊஞ்சல்

ஊஞ்சலில் சாத்தியமான குறைபாடுகளை நீக்கி நிவர்த்திசெய்வதற்காக தமிழ் மாதம் ஐப்பசியில் இவ்விழா (அக்டோபர் – டிசம்பர்) நடைபெறும். இவ்விழா டோலோத்ஸ்வம் என வழங்கப்பெறுகிறது. இவ்விழா கந்தடை இராமானுஜரால் 1489ல் தொடங்கப்பட்டது. இது இப்போது 9 நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. 1வது மற்றும் 7வது நாளில் தேவியுடன் தொட்டிலுக்கு பெருமாள் வருவார், எஞ்சிய நாட்களில் தனியாகத் தொட்டிலில் இருப்பார். பெருமாள் முன்னிலையில் ஆரயார் தினசரி பாட்டு பாடுவார். கடைசி நாள் சந்திரபுஷ்கரணிக்கு பெருமாள் விஜயம் செய்வார், தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அதன்பிறகு ஊஞ்சல் மண்டபத்திற்கு நம்பெருமாள் வருவார். திருமஞ்சனம் நடத்தப்படும். அதன்பிறகு இரவில் மூலஸ்தான கர்ப்பகிருஹதிற்கு சென்றுவிடுவார். இந்த ஊஞ்சல் திருவிழா, ஐப்பசி மாதத்தின் தேய்பிறைக்காலத்தில் (கிருஷ்ணபக்‌ஷம்) ஏகாதசிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு ஊஞ்சல் திருவிழா தொடங்கும். ஏகாதரி நாளில் கடைசி நாள் விழா வரும்.

கைசிக ஏகாதசி

இந்த விழா, ஏகாதசிக்கு முப்பது நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும். சந்தான மண்டபத்திற்கு பெருமாள் வருவார், திருமஞ்சனம் நடத்தப்படும். அதற்குப் பிறகு மாலையில் கர்ப்பகிருஹத்திற்கு திரும்பிச் சென்றுவிடுவார். மறுபடியும் இரவில் அர்ஜூண மண்டபத்திற்கு பெருமாள் வருவார். இங்கு 365 பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு 365 ஆடைகள் அணிவிக்கப்படும். நள்ளிரவில் கைசிக புராணம் ஒப்புவிக்கப்படும். கர்ப்பகிருஹத்திற்கு திரும்பும்போது பச்சை கற்பூரம் (சுத்திகரிக்கப்பட்ட கற்பூரம்) தூவப்படும் மற்றும் அதன்பிறகு கர்ப்பகிருஹத்திற்குள் நுழைந்துவிடுவார்.

 worship1

ஏகாதசி

இந்த மிகவும் முக்கியமான திருவிழா, தமிழ் மாதம் மார்கழியில் (டிசம்பர் – ஜனவரி) முழு இருபத்தொரு நாட்கள் பகல் பத்து, இரவு பத்து என இரண்டாகப் பிரிந்து ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி தினத்தில், ரங்கநாதப் பெருமாள் அற்புதமான அலங்கார ஆடையணிந்து, பரமபத வாசல் வழியாக ஒரு மகத்தான ஊர்வலத்தில் பவனி வந்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் பரவசத்திற்கிடையே ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இந்த தருணம், கோயிலில் நடத்தப்படும் அனைத்து திருவிழாக்களிலும் உச்சித் தருணமாகும். எல்லா நாட்களில் இந்த நாளில் மட்டுமே ரங்கநாத பெருமாள் உண்மையான, நிஜமான இராஜாவாகிறார் மற்றும் இவர், ஶ்ரீ ரங்கராஜர் எனப்படுகிறார். பிரத்யேகமாக எழுப்பப்பட்டு, அருமையாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பந்தல் மூலம் விஸ்தரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆயிரங்கால் மண்டபத்தில் தனது தெய்வத்திரு தர்பாரை ரங்கராஜா நடத்துகிறார், நாள் முழுக்க நாளாயிர திவ்யப்பிரபந்தம் ஓதப்படுகிறது மற்றும் பின்னிரவில் மட்டுமே அவர் கோயிலுக்கு திரும்புகிறார். அலைமோதும் பக்தர்கள் கூட்டம், விடியற்காலை முதல் நள்ளிரவு வரை விடாமல் வந்து சென்ற வண்ணம் இருக்கிறார்கள். இடைவிடாமல் பஜனைகளில் ஈடுபட்டுக்கொண்டும், நாள்முழுக்க உண்ணா நோண்பிருந்து கொண்டும் மற்றும் இரவு முழுக்க இடையறாமல் தூங்காமல் விழித்துக் கொண்டுமிருக்கும் பக்தர்கள் குழுவின் துடிப்புமிக்க ஜால்ரா இசைக்கு பாடிக்கொண்டும் மற்றும் ஆடிக்கொண்டும் இருந்தனர். உண்மையிலேயே, இது கடவுள்கள் காணவேண்டிய காட்சியாகும். உண்மையிலேயே மண்ணுலகில் ஒரு சொர்க்கலோகமாகும்!

விருப்பன் (சித்திரைத் தேர்)

இது தொழில் குறைபாடுகளை சீர்செய்யக்கூடிய மற்றும் தமிழ் மாதம் பங்குனியில் (மார்ச்-ஏப்ரல்) நடைபெறக்கூடிய மாபெரும் திருவிழா ஆகும். விஜயநகர அரசவம்சத்தைச் சேர்ந்த விருப்பண்ண உடையார் என்ற பெயர் கொண்ட ஒரு அரசன் சித்திரைத் திருவிழாவை 1383ல் நிறுவினார். முஸ்லிம்கள் படையெடுப்புக்குப் பிறகு, 1371ல் (வைகாசி மாம் 17ம் நாள்) கர்ப்பக் கிரஹத்திற்கு ரங்கநாத பெருமாள் கொண்டுவரப்பாட்டார். அந்த நேரத்தில் மிகவும் சீரழிந்த நிலையில் கோயில் இருந்தது. 1377ல், இக்கோயிலை புதுப்பிப்பதற்காக பதினேழாயிரம் தங்க நாணயங்களை விருப்பண்ணன் அரசன் கொடுத்தான். 60 ஆண்டுகள் கழித்து, கோயில் புதுப்பிக்கப்பட்ட பிறகு 1383ம் ஆண்டில் சித்திரைத் திருவிழா தொடங்கியது. இந்த திருக்கோயிலின் நலன் கருதி 52க்கும் மேற்பட்ட கிராமங்களை மன்னன் விருப்பண்ணன் ஒப்படைத்தான். 1383ல் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. அருகிலிருந்த கிராம மக்கள் ஶ்ரீரங்கத்திற்கு திரண்டுவந்தனர். இந்தத் திருவிழாவில் 8வது மற்றும் 9வது நாட்களை கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். கிராம மக்கள் தங்கள் வயல் பண்ணைகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் மற்றும் தானியங்களை நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். இந்தத்திருவிழா, ரேவதி நட்சத்திரத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது. அந்த நாளில் சித்திரைத் தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

 2nd

அங்குரார்பணம் (விதைகளை முளைக்க விடுதல்)

விஷ்வக்சேனர் (திருமாலின் சேனாதிபதி) மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் குருக்கள் புடைசூழ தாயார் சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். குருக்கள் வில்வ மரத்தின் கீழ் உள்ள மணலில் பூஜைகளை மேற்கொள்கின்றனர். சில குருக்கள் ஆற்றங்கரைக்குச் சென்று மணலை எடுக்கின்றனர். அவர்கள் “பூசுத்தம்” சொல்லி வில்வ மரத்தின் கீழிருந்து எடுத்துச் சென்ற மணலையும் ஆற்றங்கரை மணலையும் சுத்தமான நீரில் நனைத்து சுத்தி செய்யப்பட்ட மண் பானைகளுக்குள் ஒன்றாக போட்டு கலக்குகின்றனர். அந்த பானைகளுக்குள் விதைகள் விதைக்கப்பட்டு அதன் பிறகு அவை யாகசாலையில் வைக்கப்படுகின்றன. ஒரு சில நாட்களில் விதைகள் முளைவிடுகின்றன.

நகரசோதனை (வீதி ஆய்வு)

விஷ்வக்சேனர் அனைத்து நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருகிறார். அவர் திருமால் வருகை தருவதற்கு முன்னதாக அனைத்து நான்கு வீதிகளையும் ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வு விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு நடத்தப்படுகிறது. இது, நகரசோதனை என அழைக்கப்படுகிறது

4th

முதல் நாள் (கொடியேற்றம்)

முதல் நாள் அதிகாலையில் நான்கு சித்திரை வீதிகளுக்கு கொடி (கேன்வாஸ் துணியில் கருடர் படம் வரையப்பட்டது) கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு, திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதை குறிக்கும் வகையில் திருமாலின் முன்னிலையில் கொடியேற்றப்படுகிறது. கொடியேற்றத்திற்குப் பிறகு, திருமால் கண்ணாடி அறை சேர்கிறார் (பொதுமக்கள் வழிபாடு திருவிழாவின் 1வது மற்றும் 7வது நாளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது). மாலையில் திருமால் உபயநாச்சியாருடன் நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் பொய்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

இரண்டாம் நாள்

காலையில் நம்பெருமாள் நான்கு சித்திரை வீதிகளிலும் பல்லக்கில் ஊர்வலமாக வலம் வருகிறார். அதே நாள் மாலையில் நம்பெருமாள் நான்கு சித்திரை வீதிகளிலும் கற்பகவிருட்ச (விரும்பியதை அளிக்கும் கற்பகமரம்) வாகனத்தில் வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் பூதத்தாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

மூன்றாம் நாள்

காலையில் சிங்க (சிம்ம) வாகனமும் மாலையில் யாலி (கற்பனையான மிருகம்) வாகனமும் பயன்படுத்தப்படுகிறது. திருமாலின் முன்னிலையில் பேயாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

1st

நான்காம் நாள்

காலையில் நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்திலும் மாலையில் கருட வாகனத்திலும் வீதி வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

ஐந்தாம் நாள்

காலையில் நம்பெருமாள் சர்ப்ப (சேஷ வாகனம்) வாகனத்திலும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் வீதி வலம் வருகிறார். திருமாலின் முன்னிலையில் நம்மாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

ஆறாம் நாள்

காலையில் நம்பெருமாள் ஹம்ச (அன்னம்) வாகனத்திலும், மாலையில் திருமாலுக்கு தேங்காய் தண்ணீர் அபிஷேகம் செய்யப்பட்டு யானை வாகனத்திலும் வீதி வலம் அழைத்து வரப்படுகிறார். திருமாலின் முன்னிலையில் நம்மாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

8th

ஏழாம் நாள்

காலையில் பக்தர்கள் கண்ணாடி அறையில் தரிசன சேவைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியாருடன் திருச்சிவிகையில் புறப்பட்டு திருக்கொட்டாரம் (நெற்களஞ்சியம்) கண்டு வீதிவலம் வருதல். இரவு தாயார் சந்நதியில் திருமஞ்சனம் கண்டருளல். இந்த ஆலயத்தில் பெருமாளுடன் உபயநாச்சியாராக இருவரும் அமர்ந்த கோலத்தில் இருப்பார். மற்றைய ஆலயங்களில் நின்றகோலம்தான். அதன் பிறகு நள்ளிரவில் கண்ணாடி அறை சேர்கிறார். திருமாலின் முன்னிலையில் திருமழிசையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

எட்டாம் நாள்

காலையில் திருமால் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல் பின் ரெங்கவிலாச மண்டபம் அடைந்து மாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதிவலம் வருதல். நம்பெருமாள் சித்திரை தேர் கொட்டகை அருகே வரும் போது குதிரையில் நான்குக் கால் பாய்ச்சலில் செல்கிற ஒரு தனித்துவமான தரிசனம் அருளப்படுகிறது. திருமாலின் முன்னிலையில் திருமங்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன

ஒன்பதாம் நாள் (தேரோட்டம்)

அதிகாலையில் நம்பெருமாள் சித்திரைத் தேரில் நான்கு சித்திரை விதிகளிலும் உலா வருகிறார். அதன் பிறகு திருமால் ரேவதி மண்டபம் அடைந்து, திருமஞ்சனம் கண்டருளல். திருமாலின் முன்னிலையில் திருமங்கையாழ்வாரின் பாடல்கள் பாடப்படுகின்றன.

5th

பத்தாம் நாள் (சப்தாவரணம்)

காலையில் திருமால் சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். மாலையில் திருமால் இராமானுஜரின் பாடல்களைக் கேட்பதற்கு வசதியாக நம்பெருமாள் அமைதியான முறையில் (இந்த உலாவின் போது இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை) நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறார். நம்பெருமாள் இராமானுஜரின் கோவிலுக்கு செல்கிறார், அங்கு இராமானுஜரால் உள்ளன்போடு வரவேற்கப்படுகிறார். நம்பெருமாளுக்கு இராமானுஜர் தேங்காய் தண்ணீரை காணிக்கையாக செலுத்துகிறார். நம்பெருமாளுக்கு தேங்காய் தண்ணீர் செலுத்தப்பட்ட பிறகு அது இராமானுஜருக்கு செலுத்தப்படுகிறது

பதினோறாம் நாள்

காலையில் திருமால் கருட மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். மாலையில் நம்பெருமாள் முழுதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருகிறார்.

இந்தத் திருவிழா திருமால் மனிதர்களிடத்தில் மட்டுமல்ல விலங்குகளிடத்திலும் அருள்பாலிப்பார் என்பதை விளக்குகிறது. கஜேந்திரன் என்னும் பெயருடைய ஒரு யானை எந்தவொரு பிரதிபலனையும் கருதாமல் ஒரு குளத்தில் இருந்து தினமும் மலர்களை பறித்து திருமாலின் பாதங்களில் காணிக்கையாக சாத்துகிறது. யானை இந்தச் சேவையை மிகவும் விரும்பி செய்கிறது. எனவே, யானை பகவானிடம் இருந்து எதையும் கேட்கவில்லை. இதனால் திருமால் விஷ்ணுவுக்கு யானையை மிகவும் பிடிக்கிறது. வாய்ப்புக் கேடாக, ஒரு நாள் யானை மலர்களை பறித்துக் கொண்டிருந்த போது அதன் காலை முதலை கவ்வுகிறது. யானையால் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, திருமாலுக்கு வழமையாக செய்து வருகிற தனது சேவை பாதிக்கப்படுமோ என கவலைப்படுகிறது. யானை தனது சேவையை தொடர்ந்து செய்வதற்கு அருளுமாறு திருமாலை தொடர்ச்சியாக இறைஞ்சி கேட்கிறது, ஆனாலும் வலி மற்றும் வேதனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அது கேட்கவில்லை. திருமால் அவ்விடத்திற்கு விரைந்து சென்று முதலையைக் குத்திக் கொன்று யானையைக் காப்பாற்றி அருளினார். இந்த நிகழ்ச்சி கஜேந்திர மோட்சம் என்ற பெயரில் காவிரி ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்படுகிறது

10th

இந்தத் திருவிழா, திருமாலை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்ற மலர்களின் அசுத்தங்களை சுத்தப்படுத்துவதற்காக தமிழ் மாதமான சித்திரையில் (ஏப்ரல்–மே) கொண்டாடப்படுகிறது.

இந்தத் திருவிழா இராம அவதாரத்தின் நினைவுக்குறிப்பாகக் கொண்டாடப்படுகிறது என்றாலும் கூட ஸ்ரீரங்கத்தில் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்களுள் ஒருவரும் இராமரின் சீடருமான குலசேகராழ்வார் தனது மகளை ரங்கநாதருக்கு திருமணம் முடித்தார். இந்தத் திருவிழா அர்ஜூனா மண்டபத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ரங்கநாத ஸ்வாமியும் சேரகுலவள்ளி நாச்சியாரும் (குலசேகராழ்வாரின் மகள்) அருகருகே அமர்ந்திருக்கின்றனர் மற்றும் திருமஞ்சனம் கண்டருளல்.

தமிழ் மாதம் வைகாசியில் (மே-ஜூன்) கொண்டாடப்படுகிறது. விஜயநகரப் பேரரசின் மன்னர் அண்ணப்ப உடையாரால் 1444-ஆம் அண்டில் வஸந்த மண்டபம் கட்டப்பட்டது. வஸந்தோத்ஸவம் நடைபெறுவதற்காக மல்லிதேவன் புத்தூர் கிராமம் திருவிடையாட்டமாகத் (தானமாகத்) தரப்பட்டது. வஸந்தோத்ஸவம் பௌர்ணமிக்கு (முழு நிலா நாள்) 8 நாட்களுக்கு முன்னதாக தொடங்குகிறது. பௌர்ணமி திருவிழா முடிவுக்கு வந்ததும் திருமால் குதிரை வாகனம் ஏறி நான்கு சித்திரை வீதிகளில் உலா வந்து வஸந்த மண்டபம் சேர்கிறார். வஸந்த மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளல். 17) முதல் திருநாள், ஏழாந் திருநாட்களில் நம்பெருமாள் இரண்டு உபய நாச்சிமாரோடு வஸந்த மண்டபத்தில் உத்ஸவம் கண்டருளுவார். எஞ்சிய நாட்களில் திருமால் மட்டுமே வஸந்த மண்டபத்தில் உத்ஸவம் கண்டருளுவார். திருமால் ஒவ்வொரு நாளும் மூலஸ்தானத்திற்கு திரும்ப வரும் போதெல்லாம் கம்பர் மண்டபத்திற்கு வருகை தருகிறார். ஒவ்வொரு நாளும் திருமால் முன்னிலையில் ஆழ்வார் பாடல்கள் பாடப்படுகின்றன. ஸ்ரீதேவி ரங்கநாயகி கோவிலிலும் வஸந்தோத்ஸவம் மேற்கொள்ளப்படுகிறது.

Workship Timing : 

விஸ்வரூப சேவை                                               06:00 to 07:15
பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது)         07:15 to 09:00
பொது தரிசன நேரம்                                              09:00 to 12:00
பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது)          12:00 to 13:15
தரிசனம் நேரம்                                                         13:15 to 18.00
பூஜை நேரம் – (தரிசனம் கிடையாது)           18.00 to 18:45
தரிசனம் நேரம்                                                          18:45 to 21.00

9 மணிக்கு மேல் கருவறை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது

History : 

மஹாவிஷ்ணு தான் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த ஷேத்திரங்கள்) பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஶ்ரீரங்கம் ஆகும். இது, 108 பிரதான விஷ்ணு கோயில் ஶ்ரீரங்கம் ஆகும். இது 108 பிரதான விஷ்ணு கோயில்களில் (திவ்யதேசங்கள்) முதலானதாகவும், மிகவும் புகழ்பெற்ற முதன்மையானதாகவும் மற்றும் மிகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இரு திருவரங்க திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் வழங்கப் பெறுகிறது. வைஷ்ணவ பேச்சுவழக்கில் “கோயில்” என்ற சொல் இந்தக் கோயிலை மட்டுமே குறிக்கிறது. இக் கோயில் பிரமிக்கத்தக்க மிகப் பெரிய அளவு கொண்டது. இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரங்கள் கருவறையைச் சுற்றி வரக்கூடிய மிகவும் கனமான மிகவும் பெரிய மதில் சுவர்களால் அமைத்துவருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரகாரங்களிலும், தரிசனம் பெற காணவரும் எவருக்கும் ஒரு தனித்துவமிக்க காட்சி வழங்கும்வகையில், 21 பிரமிக்கத்தக்க அற்புதமான கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது.

ஶ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீரங்கநாத சுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைமிக்க ஒரு நாகரிகப் பண்பாடும் மற்றும் பேரரசுகளை கண்ட, கடந்த கால வரலாறும் உண்டு. பல்லவர்கள் ஆட்சியில், உறுதியான சமய அடித்தளம் உருவாக்கப்பட்டதைக் காணலாம். எடுத்துக்காட்டிற்கு, பல்லவ அரசு வம்சத்தால் கொடுக்கப்பட்ட ஊக்குவிப்பு, தென்னிந்தியாவில், இன்னும் குறிப்பாக கர்நாடகத்தில் ஆரியநிறுவனங்கள் வளர்ச்சிக்குப் பங்களித்ததாகத் தோன்றுகிறது. சோழர்கள் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குமேல் கிழக்கு கடற்கரைப் பகுதி மற்றும் கிழக்கு தக்காணத்தின் பெரும்பகுதியை ஆட்சி புரிந்தனர். இங்கு இவர்கள் மேம்பட்ட இந்து பண்பாடு தழைத்தோங்குவதற்கு உதவினர்.

history

பதிமூன்றாம் நூற்றாண்டில் மதுரை பாண்டியர்களாலும் மற்றும் மைசூர் ஹொய்சாளர்களாலும் சோழர்கள் தோற்கடிக்கப்பட்டனர். கல்வெட்டுகள் மற்றும் கட்டடங்கள் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு ஶ்ரீரங்கம் கோயிலைக் கட்டுவதில் ஹொய்சாளர்கள் ஆர்வம் செலுத்தினர். அதன்பிறகு பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் பாண்டியர்களால் ஹொய்சாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர், 1336ல் விஜயநகரில் நிறுவப்பட்ட இந்து ராச்சியத்திடமிருந்து கடும் எதிர்ப்பை மேற்கொண்ட முகமதியர்கள் தக்காணம் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்து ராச்சியம் 1565 வரை தனது சுதந்திரத்தை பேணிவந்தது.

இந்த சமயத்தில், இந்தியாவின் தெற்குப் பகுதியில் ஐரோப்பியர்கள் தோன்றினர். பதினொன்றாம் நூற்றாண்டில், பல வெளிநாட்டு பயணிகள் மற்றும் வணிகர்கள், விஜயநகர் பேரரசுடன் தங்கள் வணிகம் செய்வதற்கு சென்றுவரும் வழித்தடமாக உட்பகுதியைப் பயன்படுத்தினரே தவிர மற்றபடி ஆர்வம் செலுத்தவில்லை. 1600ல், ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியும் மற்றும் 1664ல் பிரெஞ்சு கம்பெனியும் அமைத்துருவாக்கப்பட்டது.

1680ல், ஔரங்கசீப் மன்னன் (1658-1707)ல் மேற்கு தக்காணத்தில் ஒரு தாக்குதல் தொடங்கினான். நீண்ட சுற்றிவளைப்பு முற்றுகை மற்றும் பெரும் உயிரிழப்பிற்குப் பிறகு. பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா கோட்டை நகரங்கள் அவன் பிடியில் விழுந்தன மற்றும் அவனது இறப்பு வரை படையெடுப்பு தாக்குதல் நீடித்தது.

ஐரோப்பாவில், அடுத்து யார் பிடிப்பது என்ற ஆஸ்திரியப் போர், ஆங்கிலேயருக்கும் மற்றும் பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையே நேரடி மோதலை ஏற்படுத்தியது. டியூப்ளே சென்னையை (மதராஸ்) (1746) கைப்பற்றினார். இது, இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயரிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 1752ல் பிரெஞ்சுகாரர்கள் சரணடையச் செய்யப்பட்டனர் மற்றும் 1754ல் டியூப்ளேயின் செயல்பாடுகளை பிரெஞ்சு அரசு ஏற்கமறுத்தது. அத்துடன் 1754ம் ஆண்டு டியூப்ளே பிரெஞ்சு அரசால் திரும்ப வரவழைக்கப்பட்டார்

1760ல், லாலி-டாலண்டல் தலைமையிலான, மேலும் ஒரு பிரெஞ்சு முயற்சி வெற்றிபெறவில்லை மற்றும் 1763ல் பிரெஞ்சு வணிக அமைப்பு கலைக்கப்பட்டது. அது முதற்கொண்டு, ஆங்கிலேய கம்பெனி இந்திய எல்லை முழுவதையும் படிப்படியாக கைப்பற்றியது. பிரெஞ்சுகாரர்கள் வெற்றிக்கு அருகே வந்தபோதிலும், பின்னர் அவர்கள் 1798ல் வெல்லெஸ்லி தலைமையிலான ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டனர். வெல்லெஸ்லி மைசூர் மீது படையெடுத்து 1799ல் ஶ்ரீரங்கப்பட்டிணம் கோட்டையை கைப்பற்றினான். அதற்குப் பிறகு தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதியும் இங்கிலாந்து கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. கர்நாடகம், அது முன்னாள் இருந்து மெட்ராஸ் மாகாணத்தின் நேரடி ஆட்சியின் கீழ் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *