சிலருக்கு ஜோதிடம் பலிக்காமல் போவது ஏன்?
காலம், நேரம், கிரகங்களின் சுழற்சி ஆகியவை ஈர்க்கும் சக்தியாக இருக்கும் போது, நமது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் எங்காவது சிறு மாறுதல் நடக்கும் போது ஜோதிடப் பலன்கள் சில நேரங்களில் தவறி விடும்.
*வகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிக்காது.
*5 அல்லது 6 கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், அவர்களின் வாழ்க்கை சாலை ஓரங்களில் வாழக்கூடிய நிலை உண்டாகும். இத்தகைய ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு ஜோதிடப் பலன்கள் பலிக்காது.
* ஒருவரின் ஜாதகத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தால் அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
*லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால், அவர்கள் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
*கேதுவுடன் 4 கிரகங்கள் சேர்ந்து, ராகுவுடன் 3 கிரகங்கள் சேர்ந்து இருப்பவர்களுக்கு ஜாதகம் கூறினால் அது பலிக்காது.
* எவ்வளவு யோகம் இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் சென்று கொண்டே இருந்தால், அவர்களுக்கு ஜாதக பலன் பலிக்காது.
*அமாவாசை திதியில் பிறந்து சூரியன்-சந்திரன்-சனி ஆகிய கிரகங்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது சூரியன், சந்திரன்-சனி இவர்கள் நீசம் பெற்றாலோ அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
* அஷ்டமி திதியில் பிறந்து, சூரியன்-சந்திரன்-குரு-செவ்வாய்-சனி ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே பாவத்தில் நின்று இருந்தால், அவர்களுக்கு ஜோதிடம் பலிக்காது.
ஜோதிடம் பலிக்க பரிகாரம் என்ன?
ஜோதில பலன்கள் பலிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டு வர வேண்டும்.